சி.வி.சண்முகம் மீது பாய்ந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசுபதி! விழுப்புரத்தில் பரபரப்பு பேட்டி!
"25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி அ.தி.மு.க.வை நாசமாக்கியவர் சி.வி.சண்முகம்!" — விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பசுபதி நிருபர்கள் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெய்லர் கடை நடத்திய சுரேஷ்பாபுவுக்கு ₹100 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி? சி.வி.சண்முகம் கனிமவளத்துறை மூலம் மாதம் ₹150 கோடி வரை ஈட்டிய பணத்தில்தான் அவரது குடும்பத்தினர் துபாயில் மாலும், பெங்களூருவில் பிசினஸும் செய்கிறார்கள்!
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் பதவி பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், பல கோடி ரூபாய் ஷோபாவுக்கு ஆசைப்பட்டு 25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி கட்சியை நாசமாக்கியது சண்முகம்தான்.
திண்டிவனம், விழுப்புரம், வானூர் தொகுதிகள் சி.வி.சண்முகத்தால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டவை.
தொடர்ந்து வீண்பழி சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். சுரேஷ்பாபு வீட்டிற்கு ஐ.டி., ஈ.டி. ரெய்டு வரவைக்கும் அளவிற்குச் நிலைமையை உருவாக்காதீர்கள்!
#Villupuram #ADMK #CVSanmugam #Pasupathi #TamilNaduPolitics #BreakingNews #VillupuramNews #TNPolitics