நிலக்கோட்டை: ஆளுநர், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மது போதையில் இருந்த சம்பவம் கொடைரோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதன்கிழமை மதியம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வருகை புரிந்து, தரைவழி மார்க்கமாக கொடைக்கானலுக்கு சென்றார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பாதுகாப்பு பணியில் மது போதையில் தள்ளாடிய காவலரை மற்ற காவலர்கள் சாலை அருகில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர்.