தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரியங்கா முன்னிலை வைத்தார். இதில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக மாமன்ற உறுப்பினர் வீரபாகு தங்கள் பகுதியில் மழை நீர் கடுமையாக தேங்கியுள்ளது ஆகையினால் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீங்கள் தெரிவித்தீர்கள் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.