திருச்செந்தூர்: கொம்புத்துறை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ₹60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் க்யூ பிரிவு போலீசாரால் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கொம்புத்துறை கடற்கரை பகுதி வழியாக படகுமூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.