வத்தலகுண்டு அருகே பரசுராமபுரம் மேற்கு வீதியில் வசித்து வருபவர் சேகர். இவரது மகள் பிரவீனா, இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். வழக்கம் போல பிரவீனாவின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர், முத்துக்குமரன், கிருஷ்ணன், கணேசன், மூர்த்தி, பெருமாள் ஆகிய ஆறு பேரும் பிரவீனாவின் வீட்டிற்கு வந்து, அவரிடம் அநாகரீகமாகத் தகராறு செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்