காளையார்கோவில்: காளையார்கோவில் எஸ்.எஸ் நகர் பகுதியில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்
காளையார்கோவில் எஸ்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்- விண்ணரசி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற விண்ணரசி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஸ்டீபன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான விண்ணரசி தேடி வருகின்றனர்.