பண்ருட்டி: வடக்குத்து-சென்னை சாலையில் வாகன சோதனையில் கணக்கில் வராத ₹87,840 பறிமுதல், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
கடலூர் மாவட்டம் ,நெய்வேலி சட்டமன்ற தொகுதி, வடக்குத்து சென்னை சாலை பகுதியில் வட்டாட்சியர் சிவகாமசுந்தரி தலைமையிலான கண்காணிப்பு குழுவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான சோதனையில் கணக்கில் வராத ₹84,840 இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவரை விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்திடம் ஒப்படைத்தனர்.