ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஜமீன் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, இடையகோட்டை ஜமாத்தார்கள் வாத்தியங்கள், கொம்பு முழங்க, தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பழங்கள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை இடையகோட்டை ஜமீன்தார் சரவண எரதொம்ம நாயக்கர் தலைமையிலான விழா குழுவினரை சந்தித்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்