திருப்பத்தூர்: தோரணம்பதி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம் - போலிசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோரணம்பதி ஊராட்சி தாதாகுள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 75 இவர் கூலித்தொழிலாளி ஆவார். இந்த நிலையில் இன்று தோரணம்பதி பகுதியில் உள்ள சாலையை கடக்க ராஜமாணிக்கம் முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.