திண்டுக்கல்லை சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி என்பவர் மேட்டுப்பட்டி, பேட்டைரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் தளபதி(26), பெஸ்லின் மகன் கவின்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் கத்தி மற்றும் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்ததாக ரவி அளித்த புகாரின் பேரில் சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.