பழனி: சிவகிரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் கைது இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக பழனி டவுன் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திண்டுக்கல் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கல்லூரி மேடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 7 பேரை மடக்கி பிடித்தனர். சிவகிரிப்பட்டி தண்ணீர் தொட்டி பகுதியில் நின்று கஞ்சா விற்றதாக 8 பேரை கைது செயதனர்.