கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஹுமாயின் சூ மங்கள் தலைமையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் விளக்கம் முடித்த பொழுது இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாம் தமிழர் கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.