திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிவார விளைநில்களுக்கு வருகின்றன. இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே விவசாயி பழனிசாமி தோட்ட வேலியில் ஒன்றரை வயது பெண் சிறுத்தை குட்டி சிக்கியது.