காஞ்சிபுரம்: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தும்பவனத்தம்மன், மனமுருகி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் படை
காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியில்,கிராம குல தெய்வமாக விளங்கின்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் இன்று ஆடி மாதம் ஆடி மூன்றாம் வெள்ளியை ஒட்டி மூலவர் ஸ்ரீ தும்பவனத்தம்மனுக்கு பால்,தயிர்,தேன்,இளநீர்,மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்பு பல்வேறு வண்ண வண்ண மலர்களால் ஸ்ரீ தும்பவனத்தம்மன் அலங்கரிக்கப்பட்டு "சந்தன காப்பு" சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்த