திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில் அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்வு ஏற்பாடு பணிகளை, எம்எல்ஏ.,க்கள் இன்று பார்வையிட்டனர்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பாண்டியன் நகரில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது, இதில் தமிழகமுன்னாள் முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் பொதுக்கூட்ட நிகழ்வு ஏற்பாடு பணிகளை எம்எல்ஏ.,க்கள் ஆனந்தன், விஜயகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.