பழனியை அடுத்த மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூலைகளுக்காக சுற்றுப்பகுதி தோட்டங்களில் இருந்து மண்ணள்ளப்படுவதாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதாலும் விவசாயம் அழிவதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்களும் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.