பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் லோகேந்திர கார்த்திக் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினார்.