திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் வார்டு எண் 1 பழைய புல எண் 788 அருந்ததியர் மடத்தை தனிநபருக்கு போலியாக பட்டா பத்திர பதிவு செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி அருந்ததியர் மடம் 1896 ஆம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் மடத்திற்கு வரி, குடிநீர், நிலவரி செலுத்தி 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வந்தனர். அருந்ததியர் மடத்தில் பாதுகாவலராக பணி செய்து வந்த மறறொரு தரப்பை சேர்ந்த நபர்கள் ஒன்று கூடி மடத்திற்கு வரும் அருந்ததிய மக்களை அடித்து விரட்டி வந்தனர்.