ஆம்பூர்: பைபாஸ் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமண்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் இன்று காலை ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.