வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் மின் கம்பத்தில் குட்டி குரங்கு ஒன்று சிக்கி தவித்ததுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தது, தாய் குரங்கு சிக்கி கொண்டிருந்த குட்டி குரங்கினை மீட்க பலவகையில் வெகு நேரமாக போராடிய நிலையில், கிராம மக்கள் மின் இணைப்பு துண்டிப்பு செய்து, ஜேசிபி வாகனம் மூலம் மீட்ட போது கீழே விழுந்த குட்டி குரங்கிற்கு தண்ணீர் வழங்கி, சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டது, தாய் குரங்கு, குட்டி குரங்கினை தூக்கி சென்று தோட்ட பகுதிக்கு சென்றது