சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில், 16 முதல் 18 வயதுடைய ஒரு பெண்ணின் பெயர் மற்றும் முகவரி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.