வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக வேதாரண்யம், தலைஞாயிறு, திருக்குவளை, திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்து. குறுவை அறுவடை பணிகள் முடிந்து தற்போது தாளடி நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த