விருத்தாசலம்: கொம்பாடிக்குப்பம் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் இருவர் விழுந்து பலத்த காயம்; அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதி
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கொம்பாடி குப்பம் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயம் தீமிதி திருவிழா நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவிற்காக பக்தர்கள் சென்ற பொழுது அதில் இரண்டு பேர் தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரை அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக போயிட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்