தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் மகாராஜன் ஆறுமுக பாண்டியன் பக்ரினில் நடைபெற்ற ஆசிய இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டி 2025 இல் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றார் வெற்றி பெற்ற மகாராஜன் ஆறுமுக பாண்டியனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.