தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரை பதவி பிரமாணம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆமினா பீபி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு சேர்மன் கருணாநிதி மற்றும் ஆணையாளர் ஆகியோர் நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து நகர்மன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.