திருப்பத்தூர்: பாவுசா நகரில் சொத்துக்காக தாயை இரும்புராடால் தலையில் தாக்கி கொலை மகன் வெறி செயல்
கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி இவருக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற பிள்ளைகள் உள்ளன. மேலும் வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆதிமூலத்துகு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் வெங்கடேஸ்வரியை வெற்றிச்செல்வன் கொலை செய்தார்.