வாணியம்பாடி: நகைகடை பஜார் பகுதியில் போலி தங்க நகையை அடகு வைத்து 1லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
வாணியம்பாடி மண்டித்தெருவில் உள்ள நகைக்கடை பஜார் பகுதியில் ஜே.சி.ஆர் மம்தா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 1 ந்தேதி அன்று 17 கிராம் போலி தங்க நகையை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை வாணியம்பாடி நகர போலீசார் கைது செய்தனர்.இது குறித்த சிசிடிவி காட்சி இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.