பழனியில் பகலில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் லேசானமழை பெய்ய தொடங்கியது. திடீரெனமின்னல் தாக்கியதில் பழனி பெரிய பள்ளிவாசல் தெற்கு தெரு மணியக்காரர் வாசல் என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.