திருப்பத்தூர்: இரவு வெளுத்து வாங்கிய கனமழை- ஆரிப் நகரை சூழ்ந்த மழை நீர்-வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பக்கெட்களால் வாரி இறைக்கும் மக்கள்
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆரிப் நகர் குடியிருப்புகளில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்த மழை நீரை பக்கெட்களால் வாரி இறைத்து அகற்றினர். ஆரிப் நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளில் வெள்ளம் உள்ளே சென்றால் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.