பழனி: பழனி கோவிலில் வருகின்ற 27-ம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவில் நடை அடைப்பு திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு, 27.10.2025 சூரசம்ஹாரம் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி திருக்காப்பிடப்படும். சுவாமி புறப்பட்டு கிரிவீதி வந்து மாலை 6.00 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். சூரசம்ஹாரம் நிகழ்வினை முன்னிட்டு, 27.10.2025 அன்று காலை அனைத்து கட்டணச்சீட்டுக்களும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.