கழுகுமலை பிள்ளையார் கோவில் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் இதில் இரு சக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் இருப்பதை தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சோமு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 46 தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் 5400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.