தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லிங்கம்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது இந்நிலையில் மக்கா சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் கடுமையாக சேதப்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை விளை நிலத்திற்கு சென்று பார்த்த விவசாயிகள் காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர்.