கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் ஏராளமானவர்களுக்கு கடந்த மாதம் தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட பார்வதி நகர் பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும் 300க்கும் அதிகமானோர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் நிலையிலும் பட்டா வழங்கப்படவில்லை என பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மன