பண்ருட்டி: முத்துநாராயணபுரத்தில் தோசைக் கரண்டியை எடுக்க கை வைத்தபோது பாம்பின் வால் அகப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெண் மயக்கம்
பண்ருட்டி அருகே முத்துநாராயணபுரம் மெயின் ரோட்டில் வசிக்கும் அமுதா என்பவர் உணவு சமைக்க தோசைத் திருப்பியை எடுக்க கை வைத்தபோது, பாம்பின் வால் கையில் அகப்பட்டதால் அப்பெண் மயக்கமடைந்தார். பின்னர் கண்விழித்து நடந்ததை கூறவே, பாம்பு பிடி வீரர் உமர் அலி சம்பவ இடத்திற்கு சென்று வீட்டினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக பிடித்து காப்புக்காட்டில் விடுவித்தார்.