திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பாலாறு பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக 67 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.