அரியலூர்: இடையத்தான்குடி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன்
அரியலூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த இடையத்தான்குடி கிராமத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லக்குடி, கருப்பிலாக்கட்டளை, ஏழேரி, பனங்கூர், புங்கங்குழி, நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.