திண்டுக்கல் மேற்கு: பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி, அவரின் மனைவி புஷ்பா ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி உள்ளிட்ட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு S.P. பரிந்துரையில் கலெக்டர், ரவி, புஷ்பா, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்