கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் சாய்பாபாவின் 100-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரதம் ஒரிசாவில் இருந்து கோவில்பட்டி வந்தடைந்தது. இந்த ரத யாத்திரையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகளின், கோலாட்டம், காவடி ஆட்டம் மற்றும் செண்டா மேளத்துடன் பவனி வந்து மீண்டும் ஸ்ரீ செண்பகவல்லி கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்