விருத்தாசலம்: பெரியார் நகரில் கம்பியூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனத்தில் மோசடி - பெண்கள் குவிந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு
கடலூர்., விருதாச்சலம் அருகே பெரியார் நகரில் கடந்த ஒரு மாதமாக இயங்கிய தனியார் கம்ப்யூட்டர் சாம்பிராணி நிறுவனத்தில் ₹5000 பணம் செலுத்தினால் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரம், சாம்பிராணி தயாரிக்கும் பவுடர் தருவோம் எனக்கூறிய நிலையில், 200க்கும் மேற்பட்டோர் ₹5000 செலுத்தி இயந்திரத்தையும் பெற்று சாம்பிராணி தயாரித்து கொடுத்துள்ளனர். திடீரென அந்நிறுவனம் மூடப்பட்டதால் மோசடி நடந்ததாக பெண்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் பெண்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.