துறையூர்: பகளவாடியில் உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் ₹57,500 பறிமுதல்
துறையூர் அருகே உள்ள பகளவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி பணம் ₹57,500 எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. துறையூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.