கோவில்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோட்டச் செயலாளர் பிச்சையா தலைமையில் ஜிடிஎஸ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கிராஜுவிட்டி பென்ஷன் ஆகியவை எட்டாவது ஊதிய குழுவில் சேர்த்திட வேண்டும் எனவும் தினம் தினம் மேளா என்ற பெயரில் டார்கெட் மற்றும் டார்ச்சரை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.