உலகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவில் மைதானத்தில் முருகன் சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி நகர்வலம் வந்து மைதானத்தில் சூரர்களை வதம் செய்தார். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.