கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சங்கர் இவர் எட்டையாபுரம் ரோடு தொழிற்பேட்டை அருகே சாலையை கடந்து செல்ல முயன்றபோது சிவகாசியில் இருந்து தூத்துக்குடிக்கு சமையல் எண்ணெய் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்