அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக தனியார் விடுதியில் ஓய்வெடுத்து பின்னர் பழனி மலை கோயிலுக்கு பேட்டரி கார் மூலம் ரோப் கார் நிலையத்துக்கு வருகை தந்தார். பின்னர் ரோப்கார் மூலம் பழனி மலைக் கோயிலுக்கு சென்றார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாய்ரட்ஜை பூஜை முடிந்த பின்பு ராஜஅலங்காரத்தில் உள்ள முருகனை தரிசனம் செய்தார்.