விருத்தாசலம்: கண்டப்பங்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹79,665 பறிமுதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கண்டப்பங்குறிச்சியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறுபாக்கத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி மோட்டார் சைக்கிள் வந்த ராஜேஷ்குமார் என்பவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி ₹79,665 வைத்திருந்து தெரியவந்தது. பின்னர், பறக்கும் படை அதிகாரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா தலைமையிலான குழுவினர், ₹79,665-ஐ பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.