பழனி பகுதிகளில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாப்பம்பட்டியில் கிராமத்தில் உள்ள குதிரையாறு அணை முழுவதுமாக நிரம்பியது. குதிரை ஆறு அணையில் 80 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியதை அடுத்து விவசாய தேவைக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இன்று பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.