திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து அவர்கள் விரும்பும் இனிப்புகள், பலகாரங்கள், படையல்கள் இட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அவர்களது கல்லறையில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவித்து, மலைகள் தூவி மரியாதை செய்து பிராத்தனை செய்தனர்.