திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நிலக்கோட்டை பகுதிகளில் தக்காளி விளைச்சல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். வத்தலக்குண்டு தக்காளி மார்கெட்டில் தினந்தோறும் 50 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், இந்த தக்காளி சீசனில் வரத்து குறைந்து விட்டதால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.