சீர்காழி: கனமழை எதிரொலி சென்பதனிருப்பு பகுதியில் டூவீலரில் சென்று விட்டு வீடு திரும்பியவர் மின்சாரத் தாக்கி பலி
சீர்காழி தாலுக்கா பாகசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக நேற்று மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில் இரவு 10:30 மணிக்கு பிரதாப் டூவீலரில் கடை வீதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து தொங்கிய மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாகசாலை போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் உட