திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியம்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் இன்று சமூக சீர்திருத்தத் துறை செயலாளர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது நாங்கள் 195 குடும்பங்கள் 35 வருடமாக வசித்து வருகிறோம் மொத்தம் 854 பேர் இந்த முகாமில் உள்ளனர் என தங்கள் பகுதியில் அடிப்படை தேவைகள் குடிநீர் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்தனர்.